2 கிராமங்களில் மீன்பிடி திருவிழா


2 கிராமங்களில் மீன்பிடி திருவிழா
x

2 கிராமங்களில் மீன்பிடி திருவிழா நடந்தது.

திருச்சி

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த செவலூரில் 120 ஏக்கர் பரப்பளவில் செவக்குளம் உள்ளது. மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் செவக்குளத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையின்போது நீர் முழுவதுமாக நிறைந்திருந்தது. அதில் அதிக அளவில் மீன்களும் இருந்தன. இந்நிலையில் தற்போது நீர் இருப்பு குறைந்து விட்டதால் கிராம மக்கள் சார்பில் மீன்களை பிடித்துக் கொள்ளும் வகையில் நேற்று மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் நடந்த இந்த மீன்பிடி திருவிழாவை நேற்று காலை ஊர் முக்கியஸ்தர் துண்டை வீசி தொடங்கி வைத்தார். இதையடுத்து கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வலை உள்ளிட்ட பலவற்றை கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ரோகு, சிலேபி என வகைவகையான மீன்கள் சிக்கியது. பெரும்பாலான மீன்கள் சுமார் 2 கிலோ முதல் 5 கிலோ வரை இருந்தன. இதனால் ஒரு மீன் சிக்கினாலும் போதும் என்று எண்ணத்தில் பொதுமக்கள் மீன்களை மகிழ்ச்சியோடு பிடித்து சென்றனர்.

இதேபோல் உசிலம்பட்டி தவிட்டுக்குளத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவிலும் மக்கள் ஆரவாரமாக பங்கேற்று மீன்களை பிடித்துச் சென்றனர். இரண்டு கிராமங்களிலும் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story