முதல்முறையாக 11 மையங்களில் நீட் தேர்வு நடந்தது


முதல்முறையாக 11 மையங்களில் நீட் தேர்வு நடந்தது
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக நீட் தேர்வு 11 மையங்களில் நடந்தது. மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 3 ஆயிரத்து 409 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக நீட் தேர்வு 11 மையங்களில் நடந்தது. மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 3 ஆயிரத்து 409 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

நீட் தேர்வு

நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அதன்படி 2022-23-ம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு இன்று நடைபெற்றது. இந்த தேர்விற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் முறையாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

அதன்படி திருவண்ணாமலை சாஷம்மாள் வித்யா மந்திர் பள்ளி, எஸ்.கே.பி. வனிதா இன்டர்நேஷனல் பள்ளி, எஸ்.கே.வி. இன்டர்நேஷனல் பள்ளி, அக்‌ஷரா வித்யாமந்திர் பள்ளி, மகரிஷிவித்யா மந்திர் பள்ளி, தி பாத் குலோபல் பப்ளிக் பள்ளி, கேந்திரிய வித்யாலயா பள்ளி, ஆரணி அத்திமலைப்பட்டு துலிப் இன்டர்நேஷனல் பள்ளி, கண்ணம்மாள் இன்டர்நேஷனல் பள்ளி, செய்யாறு விருட்சம் இன்டர்நேஷனல் பள்ளி, ஆல் இன்டியா மார்டன் பள்ளி என 11 மையங்களில் 3689 மாணவ, மாணவிகள் எழுதும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

முகக்கவசம்

தேர்வு மையத்திற்குள் செல்ல காலை 11.40 மணி முதல் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களட வீட்டில் இருந்து அணிந்து வந்த முகக்கவசத்துடன் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

அவர்களுக்கு தேர்வு மையங்களில் நுழைவு வாயிலில் புதிய முகக்கவசம் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் நீட் தேர்விற்கான அனுமதி சீட்டு (ஹால் டிக்கெட்), ஆதார் கார்டு மட்டுமே தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செல்போன், கைகெடிகாரம், கம்மல் உள்ளிட்ட நகைகள் போன்றவை அணிந்து செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.

தேர்வு எழுதும் மாணவர்களின் விவரம் அலுவலர்கள் மூலம் செல்போன் செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னரே தேர்வறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

முன்னதாக மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு முன்பு வைக்கப்பட்டு இருந்து அறிவிப்பு பலகை பார்த்து தங்களுக்கான தேர்வறை எண்ணை கண்டறிந்தனர்.

தேர்வு மையங்களின் முன்பு தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் காத்திருந்தனர். அவர்கள் தேர்வு மையத்திற்குள் சென்ற மாணவர்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.

கலெக்டர் ஆய்வு

தேர்வர்கள் மதியம் 1.30 மணி வரை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் வந்தவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை. தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணியளவில் நிறைவடைந்தது.

திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நீட் தேர்வினை கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

3 ஆயிரத்து 409 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். 280 பேர் தேர்வு எழுதவில்லை.

தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ, மாணவிகளை தேர்வு மையங்களுக்கு வெளியே காத்திருந்த அவர்களது பெற்றோர்கள் உற்சாகமாக அழைத்து சென்றனர்.


Related Tags :
Next Story