உறுப்பினருக்கு பணத்தை திருப்பி வழங்காமல் ரூ.54 லட்சம் மோசடி
உறுப்பினருக்கு பணத்தை திருப்பி வழங்காமல் ரூ.54 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் மச்சுவாடியை சேர்ந்த மணிகண்டனின் மனைவி சுபாஷினி (வயது 42). இவர் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கோவையை சேர்ந்த தனியாா் மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் உறுப்பினராக தான் சேர்ந்த நிலையில், 150 பேரையும் உறுப்பினர்களாக சேர்த்து ரூ.78 லட்சம் வரை நிறுவனத்திடம் கொடுத்ததாகவும், ஆனால் ரூ.24 லட்சத்தை மட்டும் வழங்கியதாகவும், ரூ.54 லட்சத்தை திருப்பி வழங்காமல் மோசடி செய்ததாகவும், தனியார் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சிவராமகிருஷ்ணன், அவரது மனைவி கீதா ஆகியோர் மீது புகார் தெரிவித்திருந்தார். அதன்பேரில் தம்பதி மீது மோசடி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Related Tags :
Next Story