வாகனம் மோதி மளிகைக்கடை உரிமையாளர் பலி


வாகனம் மோதி மளிகைக்கடை உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 13 March 2023 6:45 PM GMT (Updated: 13 March 2023 6:45 PM GMT)

விருத்தாசலத்தில் வாகனம் மோதி மளிகைக்கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.

கடலூர்

விருத்தாசலம்,

கம்மாபுரம் அடுத்த தர்மநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 45). இவர் விருத்தாசலம் பூதாமூரில் வசித்து வருவதுடன், அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மளிகைக்கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக முருகன் நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் பொன்னேரி புறவழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story