போடியில்ஆட்டோவில் கஞ்சா கடத்தல்; 4 பேர் கைது


போடியில்ஆட்டோவில் கஞ்சா கடத்தல்; 4 பேர் கைது
x
தினத்தந்தி 24 Dec 2022 6:45 PM GMT (Updated: 24 Dec 2022 6:45 PM GMT)

போடி நகரில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

போடி நகரில் ஆட்டோவில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போடி நகர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலை காளியம்மன் கோவில் அருகே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், போடி நந்தவனத்தைச் சேர்ந்த குருசாமி (வயது 48), விக்னேஷ் (19), கொற்கையர் பள்ளி தெருவை சேர்ந்த மாவூற்று கருப்பையா (39), வெள்ளையப்பன் தெருவை சேர்ந்த வீரக்குமார் (22) என்பதும், கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story