தொடர் கனமழை: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு


தொடர் கனமழை: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 6 Nov 2023 3:29 AM GMT (Updated: 6 Nov 2023 6:44 AM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழ்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

விடுமுறை தினமான நேற்று அருவிக்கு சீராக தண்ணீர் வரத்து இருந்ததால், சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்ததால், அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக மெயின் அருவி மற்றும் சிற்றருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம், புலி அருவிகளில் மட்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Next Story