பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு


பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு
x

அருளம்பாடி ஊராட்சியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட அருளம்பாடி கிராமமக்கள் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதருக்கு அனுப்பியுள்ள மனுவில், அருளம்பாடி ஊராட்சியில் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வீடு கட்டுவதற்கு கையெழுத்து போட வேண்டும் என்றால் அதற்கு ரூ.30 ஆயிரம் பணம் கேட்பதாகவும், தரவில்லை என்றால் அவர்களுக்கு வீடு வழங்குவதில்லை என்று ஊராட்சி மன்ற தலைவர் கூறுகிறார். எனவே இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Next Story