ஜமாபந்தி


ஜமாபந்தி
x

சிவகிரியில் ஜமாபந்தி தொடங்கியது

தென்காசி

சிவகிரி:

சிவகிரி தாலுகா அலுவலகத்தில் தென்காசி கலால் உதவி ஆணையாளர் ராஜ மனோகரன் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை போன்ற கோரிக்கைகள் அடங்கிய 195 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story