நடந்து சென்ற 2 பெண்களிடம் நகை பறிப்பு


நடந்து சென்ற 2 பெண்களிடம் நகை பறிப்பு
x

திருப்பரங்குன்றத்தில் நடந்து சென்ற 2 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசாமிகள் நகையை பறித்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தில் நடந்து சென்ற 2 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசாமிகள் நகையை பறித்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு

மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் புஷ்பவல்லி (வயது 55). இவர் திருப்பரங்குன்றத்திற்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார்.அதே பகுதியில் புளியமரம் பஸ் நிறுத்தம் பஸ்சை விட்டு இறங்கி நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மஆசாமிகள் கண் இமைக்கும் நேரத்தில் புஷ்பவல்லி அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசில் புஷ்பவல்லி புகார் செய்தார்.

புகார்

திருப்பரங்குன்றம் அருகே மேலக்குயில்குடியை சேர்ந்தவர் சத்யா (33.) இவர் சன்னதி தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு பையில் 2¾ பவுன் தங்க நகை வைத்திருந்தார்.

அதை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் பறித்து சென்றனர். இவ்வாறு அடுத்தடுத்து நகை பறிப்பு சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story