மதுரை சித்திரை திருவிழா: பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்


மதுரை சித்திரை திருவிழா: பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்
x

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் வரும் மே 5-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மே மாதம் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 16 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி பட்டாபிஷேகம் ஏப்ரல் 30-ந்தேதி(இன்று) நடைபெறுகிறது.

இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் வரும் மே 5-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணிகளில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூடுதல் காவல்துறை இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார். இந்த சித்திரை திருவிழாவிற்கு 10 எஸ்.பி.க்கள் வருகை தர உள்ளதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



Next Story