மதுரை சிறையில் போலீசார் திடீர் சோதனை; கஞ்சா, செல்போன் பறிமுதல்


மதுரை சிறையில் போலீசார் திடீர் சோதனை; கஞ்சா, செல்போன் பறிமுதல்
x

மதுரை மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை:

மதுரை மத்திய சிறையில் கைதிகளிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், நேற்று போலீசார் சிறையில் திடீர் சோதனை நடத்தினர்.

தனித்தனி குழுவாக பிரிந்து சென்று ஒவ்வொரு அறைகளில் உள்ள கைதிகளிடம் சோதனையில் ஈடுபட்டனர். இதுபோல், அங்குள்ள சமையல் அறை, குளியல் அறை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.

சில கைதிகள் மறைத்து வைத்திருந்த கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சில கைதிகளிடம் செல்போன் மற்றும் சிம் கார்டுகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story