யுபிஎஸ்சி தேர்வில் சென்னையை சேர்ந்த மதிவதினி இராவணன் 447வது இடத்தை பெற்று சாதனை...!


யுபிஎஸ்சி  தேர்வில் சென்னையை சேர்ந்த மதிவதினி இராவணன் 447வது இடத்தை பெற்று சாதனை...!
x

யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 447வது இடத்தை பெற்று அசத்தியுள்ளார் சென்னையை சேர்ந்த மதிவதினி இராவணன்!

சென்னை,

கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடிமையியல் பணிகளுக்கான தேர்வுகள் நடைபெற்றன. முதற்கட்ட தேர்வு முடிந்து ஜூன் மாதமே முடிவுகள் வெளியாகின. இதனை அடுத்து, டிசம்பர் மாதம் முக்கிய தேர்வு முடிந்து, டிசம்பர் 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.

இதனை அடுத்து, கடந்த மே 18ஆம் தேதி நேர்காணல் நடைபெற்றது. தற்போது இதற்கான மொத்த மதிப்பெண் பட்டியலும் வெளியாகியுள்ள்ளது.அதில், முதல் 4 இடங்களை பெண்கள் கைப்பற்றியுள்ளனர். இஷிதா கிஷோர் என்ற பெண் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

கடந்த வருடம் 3 பெண்கள் முதல் 3 இடத்தை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 933 காலிப்பணியிண்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

இந்தநிலையில், யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 447வது இடத்தை பெற்று அசத்தியுள்ளார் சென்னையை சேர்ந்த மதிவதினி இராவணன். இவர் தற்போது ரிசர்வ் வங்கியில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story