மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்வு


மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்வு
x

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 10,410 கன அடியாக உள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, கடந்த மே 24-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்தில் குறுவை சாகுபடிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை 6,417 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 10,410 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. மேலும் நீர்வரத்து இனி வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடபப்டுவதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று 114.63 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 114.75 அடியாக உயர்ந்துள்ளது.


Next Story