மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 18 Feb 2023 6:45 PM GMT (Updated: 18 Feb 2023 6:45 PM GMT)

கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி ெரயில்வே காலனியைச் சேர்ந்தவர் ராஜையா மகன் மைக்கேல் ராஜ் (வயது 47). இவர் புதுரோட்டில் உள்ள செல்போன் கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மைக்கேல்ராஜ், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story