போடி அருகேஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்


போடி அருகேஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 17 Feb 2023 6:45 PM GMT (Updated: 17 Feb 2023 6:46 PM GMT)

போடி அருேக ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்திய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

போடி அருகே உள்ள நாகலாபுரம் கெஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் மாலை இவர், நாகலாபுரத்திற்கு ஆட்ேடாவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திகா, நந்தினி ஆகியோர் மணிகண்டனை ஆட்டோவில் இந்த பக்கம் வரக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து மணிகண்டன் தனது ஆட்டோவை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த பால்பாண்டி, சரவணன், ராஜசேகர், கோபி ஆகியோர் ஆட்டோவை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். அதை தட்டிகேட்டபோது மணிகண்டனை அவர்கள் தாக்கினர். இதுகுறித்து மணிகண்டன் போடி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பால்பாண்டி, சரவணன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story