பண்ணாரி சோதனைச்சாவடி அருகே 2 குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானை


பண்ணாரி சோதனைச்சாவடி அருகே 2 குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானை
x

பண்ணாரி சோதனைச்சாவடி அருகே 2 குட்டிகளுடன் காட்டு யானை உலா வந்தது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்குட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, கரடி, காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகள் ஏராளமாக காணப்படுகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அங்குள்ள ரோட்டை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் 2 குட்டிகளுடன் காட்டு யானை ஒன்று வெளியேறியது. பின்னர் அந்த யானை ரோட்டுக்கு வந்து அப்படியே உலா வந்தது. சிறிது நேரம் வரை ரோட்டிலேயே 2 குட்டிகளுடன் நின்று கொண்டிருந்த காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. காட்டு யானையை கண்டதும், அங்கு நின்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் தங்களுடைய செல்போனில் புகைப்படம் எடுத்தனர். இதேபோல் இரவு 11 மணி அளவில் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே கரடியும் வந்தது. சிறிது நேரம் சுற்றிதிரிந்த கரடி பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.


Related Tags :
Next Story