நெல்லை: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - ஒரு தொழிலாளி உயிரிழப்பு


நெல்லை: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - ஒரு தொழிலாளி உயிரிழப்பு
x

நெல்லை, அணைக்கரை பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அணைக்கரை பகுதியில் இடைச்சிவிளையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தின் மத்தியில் குடிசை தொழிலாக பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை பார்த்து வந்த ராஜ்குமார் என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்து நடந்தபோது ஒருவர் மட்டுமே வேலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story