குளத்தில் தவறி விழுந்த முதியவர் சாவு


குளத்தில் தவறி விழுந்த முதியவர் சாவு
x

குளத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் நெடுந்தெரு பகுதியில் வசித்து வந்தவர் கண்ணன்(வயது 65). இவருக்கு பார்வை சரியாக தெரியாது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் நேற்று காலை தெப்பக்குளம் அருகில் வந்த போது நிலை தடுமாறி தெப்பக்குளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார், கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story