கம்பத்தில்வாலிபருக்கு கொரோனா பாதிப்பு


கம்பத்தில்வாலிபருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 21 March 2023 6:45 PM GMT (Updated: 21 March 2023 6:46 PM GMT)

கம்பத்தில் வாலிபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தேனி

சென்னை, கோவை, செங்கல்பட்டு, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம், கம்பத்தில் பல மாதங்களுக்கு பிறகு வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கம்பம் பகுதியை சேர்ந்த 32 வயது வாலிபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்வதற்காக கடந்த 17-ந்தேதி கொரோனா பரிசோதனை செய்தார். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவு வந்தது. அதில் அந்த வாலிபருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், கம்பம் நகராட்சி சுகாதார பிரிவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் அரசக்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார பணியாளர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட வாலிபரின் வீட்டிற்கு சென்றனர். அங்கு வைத்து அந்த வாலிபருக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தினர். மேலும் அந்த வீட்டில் உள்ள அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


Related Tags :
Next Story