சிவகாசி மாநகராட்சி அரங்கில் பிரதமர் படம் வைக்க எதிர்ப்பு


சிவகாசி மாநகராட்சி அரங்கில் பிரதமர் படம் வைக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 25 May 2022 7:21 AM GMT (Updated: 25 May 2022 7:22 AM GMT)

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் பிரதமர் படம் வைக்க திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகாசி:

சிவகாசி மாநகராட்சி கூட்டம் இன்று காலை 12 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தின் போது பாஜக கவுன்சிலர் குமரி பாஸ்கர், பிரதமர் நரேந்திர மோடியின் உருவ படத்தை கூட்ட அரங்கில் வைக்க வலியுறுத்தினார்.

மேலும் தான் எடுத்து வந்த பிரதமரை படத்தை கமிஷனரிடம் கொடுத்து கூட்ட அரங்கில் வைக்க கோரினார். இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story