நாளை மின்தடை
சிவகிரியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது
தென்காசி
சிவகிரி:
கடையநல்லூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் ஜே.பிரேமலதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி உபமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
எனவே சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதப்பேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடப்பட்டி, வடுகப்பட்டி ஆகிய கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது.
மின் கம்பிகளில் தொடும் நிலையிலுள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story