பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்


பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
x

பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை கணக்க விநாயகர் கோவிலில் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பிரகதீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கிரிவலம் நடைபெற்றது. கோவிலில் இருந்து தொடங்கிய கிரிவலம் வன்னியர்குழி, கணக்க விநாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் பிரகதீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.


Next Story