ராணிப்பேட்டை: கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த தனியார் பஸ் - 7 பேர் படுகாயம்


ராணிப்பேட்டை: கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த தனியார் பஸ் - 7 பேர் படுகாயம்
x

சோளிங்கர் அருகே தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்து விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

சோளிங்கர்,

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து திருத்தணிக்கு தனியார் பஸ் சென்றது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பஸ் பில்லாஞ்சி அருகே செல்லும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த வீட்டில் மோதி விபத்துக்குள்ளனது.

இதில் பஸ்சில் பயணம் செய்தவர்களில் 7 பேர் லேசான காயங்கள் ஏற்பட்டது . விபத்து குறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்துக்குள்ளான வீட்டில் அதிஷ்டவசமாக யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


Next Story