5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் நியமனம் செய்ய கோரிக்கை


5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் நியமனம் செய்ய கோரிக்கை
x

5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் நியமனம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர்,

தமிழ்நாடு சுகாதார மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் நல சங்கத்தின் கரூர் மாவட்ட அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இணை செயலாளர் சஞ்சீவி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அன்பரசு சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் 334 சுகாதார ஆய்வாளர்களை நிரப்பும்போது டிரைனிங் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப வேண்டும். எம்.டி.எம்.-ல் பணி கிடைக்காதவர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும். 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கிஷோர் நன்றி கூறினார்.


Next Story