மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2023 7:55 PM GMT (Updated: 23 Jun 2023 4:39 AM GMT)

ராஜபாளையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி விலக்கில் இருந்து புனல்வேலி சாலையில் மருத்துவனேரி கண்மாய்க்கு நடுவே செல்லும் சாலையின் இருபுறமும் பேவர் பிளாக் கற்களை கொண்டு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நடைமேடை சாலையை விட சுமார் அரை அடி வரை உயரமாக உள்ளது. இதனால் நடை மேடை அமைக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு விபத்துகள் நடந்துள்ளன. எனவே நடைமேடையை சாலை மட்டத்திற்கு சமப்படுத்த வலியுறுத்தி புனல்வேலி பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும், நடைமேடையை சமப்படுத்தவும் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட 2 பெண்கள் உள்பட 16 பேரை தளவாய்புரம் போலீசார் கைது செய்தனர்.


Next Story