திருச்சி வரி ஆலோசகரிடம் ரூ.62½ லட்சம் மோசடி


திருச்சி வரி ஆலோசகரிடம் ரூ.62½ லட்சம் மோசடி
x

திருச்சி வரி ஆலோசகரிடம் ரூ.62½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி தீரன்நகர் பூண்டிமாதா நகர் 3-வது குறுக்கு வீதியை சேர்ந்தவர் முஷாக் ஷெரிப் (வயது 52). இவர் திருச்சி பெரியமிளகுபாறை பகுதியில் வரி ஆலோசகர் அலுவலகம் நடத்தி வருகிறார். திருச்சி-திண்டுக்கல் மெயின்ரோட்டில் பொன்னகர் பகுதியில் உள்ள பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் என்ற தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார்.

அந்த வங்கியில் மணப்பாறை வைகைகுளம் வடக்கு லட்சுமிபுரம் பகுதியை சோ்ந்த மாரிமுத்துவின் மகன் லட்சுமிகாந்த் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முஷாக் ஷெரிப்பை தொடர்பு கொண்ட லட்சுமிகாந்த், "எங்கள் வங்கியில் ஏராளமான தங்க நகைகள் ஏலத்துக்கு வருகிறது. அவற்றை நீங்கள் ஏலம் எடுத்து விற்றால், உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்" என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.இதை உண்மை என்று நம்பிய அவர், ரூ.62½ லட்சத்தை பல தவணைகளில் லட்சுமிகாந்திடம் கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும், அவர் பணத்தையோ, நகைகளையோ திருப்பி கொடுக்கவில்லை. இதுபற்றி கேட்ட போது அவர் சரிவர பதில் கூறவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த முஷாக் ஷெரிப், இதுபற்றி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.இதுகுறித்து உரிய விசாரணை நடத்த திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்பேரில் லட்சுமிகாந்த் மீது ஏமாற்றி மோசடி செய்த பிரிவின் கீழ் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story