சேலம்: வீட்டில் தனியாக இருந்த இளைஞரை தாக்கி ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை


சேலம்: வீட்டில் தனியாக இருந்த இளைஞரை தாக்கி ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை
x

சேலம் மாவட்டத்தில் இளைஞரை தாக்கி சுமார் 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் இளைஞரை தாக்கி சுமார் 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சையத் அஸ்ஸலாம். இவரின் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அஸ்ஸலாம் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதை நோட்டமிட்ட கும்பல் வீட்டினுள் புகுந்து சுமார் 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியைடந்து திருடர்களை துரத்தி சென்ற அஸ்ஸலாமை, கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் தாக்கிய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story