கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல்; பெண் கைது


கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல்; பெண் கைது
x

கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பெண் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். அப்போது செக்கடி தெருவை சேர்ந்த ஜெகதீசனின் மனைவி காந்தி (வயது 53) என்பவரது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து காந்தியை கைது செய்தனர்.


Next Story