மீன்பிடித் திருவிழாவில் அதிர்ச்சி.. வலையில் பாம்பு சிக்கியதால் பதறியோடிய மக்கள்...!


மீன்பிடித் திருவிழாவில் அதிர்ச்சி.. வலையில் பாம்பு சிக்கியதால் பதறியோடிய மக்கள்...!
x

மீன்பிடித் திருவிழாவின் போது வலையில் பாம்பு சிக்கியதால் பொதுமக்கள் பதற்றம் அடைந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் மயிலாப்பூர் உடையான் கிராமத்தில்; மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. மீன் பிடித்திருவிழாவில் பொதுமக்கள் வலைகளை வீசி ஆர்வமாக மீன்களை பிடித்து வந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக சில பொதுமக்கள் வீசிய வலையில் மீனுக்கு பதிலாக பாம்புகள் வந்ததால் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு கண்மாயில் இருந்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



Next Story