அதிகரிக்கும் வெப்பநிலை: தமிழகத்தில் இரு நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்ட வெப்பம்


அதிகரிக்கும் வெப்பநிலை: தமிழகத்தில் இரு நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்ட வெப்பம்
x

தமிழ்நாட்டில் 2 நகரங்களில் வெப்பம்100 டிகிரியை தொட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கோடை வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாடமுடியாத அளவுக்கு வெப்பம் உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தொட்டுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், கரூர் மாவட்டம் பரமத்தியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளது.


Next Story