அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

சங்கராபுரம் பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள பாண்டலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஏரிக்கரை துர்க்கையம்மன் கோவில் உள்ள இக்கோவிலில் ஆடி 3-வது வெள்ளியையொட்டி துர்க்கைக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் பூட்டை மாரியம்மன் , தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன், அ.பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன், சங்கராபுரம் வாசவியம்மன், புற்று மாரியம்மன், நாகாத்தம்மன், வழிகாட்டி மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடி 3-வது வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story