புனித பதுவை அந்தோணியார் ஆலய தேர் பவனி
புனித பதுவை அந்தோணியார் ஆலய தேர் பவனி நடந்தது.
பெரம்பலூர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே குரும்பலூரில் புனித பதுவை அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 31-ம் ஆண்டு திருவிழாவினை முன்னிட்டு சப்பர தேர் பவனி நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட சப்பர தேரில் புனித அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டது. பின்னர் முக்கிய வீதிகளின் வழியாக சப்பர தேர் பவனி சென்று மீண்டும் தேவலாயத்துக்கு வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் காலை தேவாலயத்தில் அருள்பணியாளர் ஜெயராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடத்தப்பட்டு, திருவிழா நிறைவடைந்தது.
Related Tags :
Next Story