பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு - 22-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு - 22-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
x

கோப்புப்படம்

தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.

சென்னை:

தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-23-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த தேர்வில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதத்துக்கு அரசு பள்ளி மாணவர்கள் உள்பட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.

2022-23-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவர்கள் வருகிற அக்டோபர் 1-ந் தேதி நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வுக்கு மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே மாணவர்கள் இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 22-ந் தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத்தொகை ரூ.50-ஐ சேர்த்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story