தி மு க ஆலோசனை கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்


தி மு க ஆலோசனை கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்
x

விழுப்புரம் மத்திய மாவட்ட தி மு க ஆலோசனை கூட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் மாவட்ட செயலாளர் புகழேந்தி எம் எல் ஏ அறிக்கை

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். கூட்டத்தில் அடுத்த மாதம்(ஜூன்) 3-ந் தேதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

எனவே இக்கூட்டத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளான மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், துணைத்தலைவர்கள், உறுப்பினர்கள், நகரமன்றம், பேரூராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story