எலி மருந்தை தின்ற செவிலியர் சிகிச்சை பலனின்றி சாவு


எலி மருந்தை தின்ற செவிலியர் சிகிச்சை பலனின்றி சாவு
x

எலி மருந்தை தின்ற செவிலியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புதுக்கோட்டை

ஆவூர்

விராலிமலை தாலுகா, ஆவூர் மேலப்பட்டியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் பானுப்பிரியா (வயது 19). இவர், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பானுப்பிரியாவிற்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்து அதற்காக ஒரு மாப்பிள்ளை பார்த்து உள்ளனர். அந்த மாப்பிள்ளையை பிடிக்காததால் பானுப்பிரியா மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பானுப்பிரியா கடந்த 13-ந் தேதி உணவில் எலி பேஸ்ட்டை (விஷம்) கலந்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர் வாந்தி எடுத்ததால் பானுப்பிரியாவை வீட்டில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பானுப்பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story