சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி ஒரு கிலோ விலை ரூ.140 ஆக உயர்வு


சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி ஒரு கிலோ விலை ரூ.140 ஆக உயர்வு
x

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் தக்காளி ஒரு கிலோ விலை ரூ.140 ஆக உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சென்னை,

சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று தக்காளி ஒரு கிலோ ரூ.110 விலைக்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், தக்காளி விலை ஒரே நாளில் இன்று ஒரு கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து உள்ளது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சில்லரை விற்பனையில் இன்னும் விலை அதிகரிக்க கூடிய சூழல் காணப்படுகிறது. இதன்படி, சில்லரை விற்பனை கடைகளில் ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது.

1,100 டன் தேவையுள்ள சூழலில், 400 டன் மட்டுமே தக்காளி வரத்து உள்ளது. இதனால், பற்றாக்குறையால் விலை அதிகரித்து காணப்படுகிறது என மொத்த விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

இதேபோன்று, இஞ்சி ஒரு கிலோ விலை ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. பட்டாணி விலை ரூ.200 ஆக உள்ளது.


Next Story