எழும்பூர்-நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்


எழும்பூர்-நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரெயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்
x

சென்னை எழும்பூர்- நெல்லை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் மேல்மருவத்தூர் ரெயில்நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தைப்பூசம் விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர்- நெல்லை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் மேல்மருவத்தூர் ரெயில்நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.060609) இன்று (வெள்ளிக்கிழமை), 29 மற்றும் ஜனவரி 5, 12, 19 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும். மறுமார்க்கமாக, நெல்லையிலிருந்து எழும்பூர் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06070) வரும் 28, மற்றும் ஜனவரி 4, 11, 18 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story