கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டி வீட்டில் திருட்டு


கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டி வீட்டில் திருட்டு
x

கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டி வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு நகை திருடு போனது தெரிய வந்தது.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் கிராமத்தில் வசித்து வருபவர் வசந்தாம்மாள் (வயது 67). வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்த இவர், நேற்று வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு வசந்தம்மாள் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன் நகை திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து மூதாட்டி கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story