குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.25 ஆயிரம் திருட்டு


குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.25 ஆயிரம் திருட்டு
x

குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.25 ஆயிரம் திருட்டுபோனது.

திருச்சி

திருச்சி உறையூர் ராமலிங்கம் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 28). இவர் குண்டூர் பகுதியில் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு தன்னுடைய நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலை அந்தநிறுவனத்தின் சுமைதூக்கும் தொழிலாளி சரவணன் நிறுவனத்தை திறக்க வந்தார். அப்போது நிறுவனத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உடனடியாக இதுபற்றி நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அந்த நிறுவனத்தின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த ரூ.25 ஆயிரத்து 500-ஐ திருடிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கு பதிவாகியிருந்த தடயங்களை போலீசார் சேகரித்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story