கத்தியை காட்டி மிரட்டல்; ரவுடி உள்பட 2 பேர் கைது


கத்தியை காட்டி மிரட்டல்; ரவுடி உள்பட 2 பேர் கைது
x

கத்தியை காட்டி மிரட்டல்; ரவுடி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சேட்டுவிடம்(வயது 28) கத்தியை காட்டி பணம் கேட்டதாக அளித்த புகாரின்பேரில் கீழ அம்பிகாபுரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த கீர்த்திமணியை(30) மீது அரியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார்.

இதேபோல் அரியமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த இஸ்மத்தின்(30) டிபன் கடைக்கு, அரியமங்கலம் காயிதே மில்லத் நகரை சேர்ந்த பேச்சிமுத்து(28) சென்று கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 கேட்டுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் அரியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா வழக்குப்பதிவு செய்து பேச்சமுத்துவை கைது செய்தார். பேச்சிமுத்து மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story