திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2¼ கோடி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2¼ கோடி
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.2¼ கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதம் 2 முறை எண்ணப்படும். இந்த மாதம் உண்டியல் எண்ணும் பணி முதல் முறையாக கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் எண்ணப்பட்டன.

கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர்கள் ராம்தாஸ், செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது.

இதில், துணை ஆணையர் வெங்கடேஷ், நாகர்கோவில் உதவி ஆணையர் தங்கம், ஆய்வர்கள் செந்தில்நாயகி, ருக்மணி, சண்முகராஜா, அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன், மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரபணி குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரபணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர்.

2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியலில் இருந்து ரூ.2 கோடியே 22 லட்சத்து 75 ஆயிரத்து 893 கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 1 கிலோ 193 கிராமும், வெள்ளி 15 கிலோவும், 234 வெளிநாட்டு பணமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


Next Story