உடையான் கண்மாயில் மீன்பிடி திருவிழா


உடையான் கண்மாயில் மீன்பிடி திருவிழா
x

உடையான் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே மைலாப்பூர் ஊராட்சியில் உடையான் கண்மாயில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் வெள்ளை துண்டு வீசிய பின்பு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கண்மாயில் இறங்கி மீன் பிடிக்க தொடங்கினர். இதில் பொதுமக்கள் ஊத்தா தூரி, கச்சா, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி மீன் பிடித்தனர். இதில் பொதுமக்களுக்கு கெண்டை, கெளுத்தி, விரால், ஜிலேபி உள்ளிட்ட பல வகை மீன்கள் கிடைத்தது.

மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்ட ஏராளமானவர்களின் வலையில் பாம்புகளும் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story