மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைவு


மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைவு
x

மேட்டூர் அணையில் இன்று நீர்மட்டம் 115.10 அடியாக குறைந்துள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, கடந்த 24-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்தில் குறுவை சாகுபடிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று மாலை வரை 3,599 கன அடியாக இருந்த நீரவரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 3,420 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 8 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 115.38 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 115.10 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 86.86 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.


Next Story