பாம்பு கடித்து பெண் பலி


பாம்பு கடித்து பெண் பலி
x

வந்தவாசி அருகே பாம்பு கடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கீழ்வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரின் மனைவி சரஸ்வதி (45). இவர்களுக்கு வினோத் என்ற மகனும், விஜயலட்சுமி, நந்தினி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் சரஸ்வதி நாராயணன் என்பவரின் விவசாய நிலத்தில் வேர்க்கடலை பறிப்பதற்காக சென்றார்.

அங்கு வேர்க்கடலை செடி பிடுங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென பாம்பு கடித்தது. உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story