நெல்லையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்


நெல்லையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்
x

நெல்லையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) 5 சட்டசபை தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்கிறார்.

நெல்லை,

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

மு.க.ஸ்டாலின் நெல்லை டவுனில் இன்று (சனிக்கிழமை) மதியம் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரசாரம் செய்கிறார். நெல்லை சட்டசபை தொகுதியில் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், பாளையங்கோட்டை தொகுதியில் அப்துல்வகாப், அம்பை சட்டசபை தொகுதியில் ஆவுடையப்பன், ராதாபுரம் சட்டசபை தொகுதியில் மு.அப்பாவு ஆகிய 4 தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்கிறார். நாங்குநேரி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டுகிறார்.

முன்னதாக மு.க.ஸ்டாலின் இன்று காலை குமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியில் திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார். அங்கு பிரசாரத்தை முடித்துக் கொண்டு கார் மூலம் நெல்லை டவுன் வருகிறார்.

அங்கு 5 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி, மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். பிரசாரத்தை முடித்துவிட்டு மு.க.ஸ்டாலின் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார்.

Next Story