கென்யாவில் பேருந்து விபத்து; 40 பேர் பலி
கென்யாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 40 பேர் பலியாகி உள்ளனர்.
நைரோபி,
கென்யாவின் மேற்கே நைரோபியில் இருந்து காகமேகா நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 52 பயணிகள் இருந்தனர்.
இந்நிலையில் பேருந்து கெரிச்சோ கவுண்டி பகுதியில் சென்றபொழுது திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 40 பேர் பலியாகினர். எனினும் பேருந்தின் மேற்கூரை உடைந்து நொறுங்கியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை கூடும் என கூறப்படுகிறது.
கென்யாவில் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 3 ஆயிரம் பேர் மரணம் அடைகின்றனர். இந்த எண்ணிக்கை 12 ஆயிரம் ஆக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் பேருந்து மற்றும் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 36 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 2016ம் ஆண்டு எரிபொருள் நிரப்பிய லாரி ஒன்று வாகனங்கள் மீது மோதி கூட்டம் நிறைந்த நெடுஞ்சாலையில் வெடித்துள்ளது. இதில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.