கேரளாவில் வன்முறை எதிரொலி: இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை


கேரளாவில் வன்முறை எதிரொலி: இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
x

கேரளாவில் வன்முறை எதிரொலியாக, இங்கிலாந்து சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

எனவே கேரளாவுக்கு செல்லும் தனது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இங்கிலாந்து அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதில், நீங்கள் (இங்கிலாந்துவாசிகள்) கேரளாவில் இருந்தாலோ அல்லது கேரளாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தாலோ ஊடக செய்திகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும். மேலும் தொடர்ந்து விழிப்பாக இருப்பதுடன், கூட்டமாக மக்கள் கூடும் இடங்களை தவிர்க்கவும் வேண்டும்” என கூறியுள்ளது.


Next Story