ஈரானில் பயங்கரவாதிகள் தாக்குதல் ராணுவ வீரர் பலி


ஈரானில் பயங்கரவாதிகள் தாக்குதல் ராணுவ வீரர் பலி
x
தினத்தந்தி 2 Feb 2019 6:30 PM GMT (Updated: 2 Feb 2019 5:59 PM GMT)

ஈரானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.

டெக்ரான்,

ஈரான் நாட்டில் ஷியா பிரிவு மதத்தலைவர் அயோத்துல்லா கொமேனியின் ஆதரவாளர்களை கொண்டு 1979-ம் ஆண்டு, ஐ.ஆர்.ஜி.சி. என்னும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை உருவாக்கப்பட்டது.

இந்தப் படை ராணுவத்தின் துணை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையகம், சிஸ்டான்–பலுசெஸ்தான் மாகாணத்தில் நிக் சாஹர் நகரத்தில் உள்ளது. இந்த தலைமையகத்தின் மீது பயங்கரவாதிகள் திடீரென அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story