இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு


இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு
x
தினத்தந்தி 17 March 2019 11:30 PM GMT (Updated: 17 March 2019 8:12 PM GMT)

இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா மாகாணத்தில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித்தீர்த்தது. இடைவிடாது பெய்த மழையால் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் தலைநகர் ஜெயபூரா மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வெள்ளக்காடாகின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்ததாலும், மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அத்துடன் மின் இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 63 ஆக உயர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 60 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் சுலாவேசி மாகாணத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் அதனை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதில் 70 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.


Next Story