எகிப்தில் பயங்கரவாத தாக்குதலில் 8 போலீசார் பலி


எகிப்தில் பயங்கரவாத தாக்குதலில் 8 போலீசார் பலி
x
தினத்தந்தி 5 Jun 2019 11:00 PM GMT (Updated: 5 Jun 2019 7:42 PM GMT)

எகிப்தில் பயங்கரவாத தாக்குதலில் 8 போலீசார் பலியாகினர்.

கெய்ரோ,

எகிப்து நாட்டில் மத்திய பெருங்கடல் மற்றும் செங்கடலுக்கு அருகே சீனாய் தீபகற்ப பகுதி அமைந்துள்ளது. அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் பயங்கரவாதிகள் சீனாய் தீபகற்பத்தில் உள்ள நகரங்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில், அங்குள்ள அரிஷ் நகரில் இருக்கும் போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் போலீசார் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை.

Next Story